பழனி முருகன் கோயிலில் ரோப்கார், விஞ்ச் சேவை டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கியது.
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ரோப்கார், விஞ்ச் சேவை டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கியது. ரோப்கார் பயணத்துக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று பழனி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 100 நபர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் ஆன்லைன் வசதியை பயன்படுத்திக் கொள்ள கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.