Select Location
All Locations
State
Region
City / District
பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இனி தடை!

பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இனி தடை!

பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸில் வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்திருந்தார். மேலும், தங்கள் நாட்டு குழந்தைகளின் மூளை விற்பனைக்கு அல்ல என்றும், அமெரிக்கா அல்லது சீனாவில் உற்பத்தியாகும் செயலிகள் மூலம் பிரான்ஸ் குழந்தைகளின் உணர்வுகளை கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தது. அப்போது, இரு அவைகளிலும் அந்நாட்டு எம்.பி.க்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News