“பயந்து ஓடக்கூடிய ஆள் நான் கிடையாது” - கொந்தளித்துப் பேசிய செந்தில் பாலாஜி!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மதுபான கொள்முதல் டெண்டரில் முறைகேடு, சட்டவிரோதமாக பார்கள் நடத்த அனுமதி வழங்கியது, டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 28ஆம் தேதி (28.07.2026) வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.