Select Location
All Locations
State
Region
City / District
"தேவேந்திர பட்னாவிஸ் எதிர்காலத்தில் பிரதமராவார்"

"தேவேந்திர பட்னாவிஸ் எதிர்காலத்தில் பிரதமராவார்" - மகாராஷ்டிரா முதல்வரின் சித்தப்பா நம்பிக்கை

மகாராஷ்டிராவில் முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சராவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புனேயில் தேவேந்திர பட்னாவிஸ் வாழ்க்கை வரலாறு தொடர்பாக எழுதப்பட்ட புத்தகத்தை பட்னாவிசின் சித்தப்பா பாலாசாஹேப் வெளியிட்டார். இதில் பேசிய பாலாசாஹேப், "இவ்வளவு இளம் வயதில், குறுகிய காலத்தில், இவ்வளவு சுமூகமாக சாதித்தவர்கள் வரலாற்றில் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று நான் நம்புகிறேன்.

ஜனசங்கத்தின் ஆரம்ப நாட்களில் நிதியோ அல்லது கட்சித் தொண்டர்களோ இல்லாத போதிலும், நானும் எனது சகோதரர்(பட்னாவிஸ் தந்தை) கங்காதர்ராவும் கிராமப்புறங்களில் பரவலாக பிரச்சாரம் செய்வோம். ஜனசங்கத்தின் தீவிரத் தலைவரான கங்காதரராவ், தேர்தல் பிரச்சாரத்தின் போது கல் வீச்சு மற்றும் கடுமையான வார்த்தைகளால் திட்டுதல் உட்பட கட்சித் தொண்டர்கள் அடிக்கடி விரோதத்தை எதிர்கொள்ளும் கிராமங்களில் பணியாற்றினார்.

கங்காதரராவ் தனது பணியில் தீவிரமானவர், ஆனால் இயல்பிலேயே இரக்க குணம் கொண்டவர். ஜனசங்கம் இல்லாத பகுதிகளுக்கும் கூட அவர் சென்றார்.


Vikatan 56 minutes ago
Home Flash News