Select Location
All Locations
State
Region
City / District
“சாமானியர்களிடம் ஒரு பைசா கூட ‘யுபிஐ கட்டணம்’ வசூலிக்கப்படாது”

“சாமானியர்களிடம் ஒரு பைசா கூட ‘யுபிஐ கட்டணம்’ வசூலிக்கப்படாது” - நயினார் நாகேந்திரன்

சென்னை: யுபிஐ கட்டணம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘டிஜிட்டல் இந்தியா’ இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

2016-ல் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, சாமானிய மக்கள் யுபிஐ (UPI) மூலம் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகின்றன. வரும் காலங்களிலும் சாமானிய மக்களிடமோ அல்லது சிறு கடைக்காரர்களிடமோ ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கப்படாது என்பதே உண்மை

உலகின் மிகப் பெரிய பணப் பரிவர்த்தனை அமைப்பான யுபிஐ-ன் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே தற்போது நிதி ஆதாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இது வணிகர்களுக்கும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தமே தவிர, இது சாமானிய மக்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்.

எனவே, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்துக்காக பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.


Hindu Tamil 21 hours ago
Home Flash News