அரக்கோணத்தில் தவெக அரசின் ஆன்லைனில் மது வாங்கும் திட்டத்தில் குளறுபடி என புகார்
அரக்கோணம்: அரக்கோணத்தில் தவெக அரசின் ஆன்லைனில் மது வாங்கும் திட்டத்தில் குளறுபடி என புகார் அளித்துள்ளனர். ஆன்லைனில் பணம் செலுத்தியும் டாஸ்மாக் கடையில் அதற்கான வசதி இல்லை எனக்கூறி மதுபாட்டில் தர மறுப்பதாக வீடியோ வெளியீடு. போலீசில் சென்று புகாரளிக்க, “நாங்கள் புகாரை பெற மட்டுமே முடியும், நடவடிக்கை எடுக்க முடியாது. மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் முறையீடுங்கள்” என போலீசார் அறிவுறுத்தல்.