Select Location
All Locations
State
Region
City / District
சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நல்லிணக்கப் பெருவிழா! மு.க. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நல்லிணக்கப் பெருவிழா! மு.க. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் முன்னிறுத்தும் அழகிய நல்லிணக்கப் பெருவிழாவான ஓணம் கொண்டாடும் மலையாள உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஓணம் பண்டிகை கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.

இந்த ஆண்டு நாளை (ஆக. 26) ஓணம் பண்டிகை, வெகு சிறப்பாக கொண்டாடவுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரள மக்களின் அறுவடைத் திருநாளாகவும் பண்பாட்டுப் பெருவிழாவாகவும் ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரளம் மட்டுமில்லாமல், பூமிப்பந்தில் மலையாளிகள் வாழும் பகுதிகளில் எல்லாம் எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய விழாவாக ஓணம் திகழ்கிறது. சூழ்ச்சிகளாலும் புனையப்பட்ட கதைகளாலும் மாவேலி மன்னனை மறக்கடிக்க நினைத்ததை முறியடித்து, ஆண்டுதோறும் அத்திராவிட அரசனை மக்கள் நினைவுகூரும் விழாவாக ஓணம் திகழ்கிறது. அறுசுவை உணவும் அழகிய புத்தாடைகளும் அத்தப்பூக்கோலமும் கலைநிகழ்ச்சிகளும் நிறைந்த வண்ணமயமான திருவிழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் வாழும் மலையாளச் சகோதரர்களும் இவ்விழாவை இனிதே கொண்டாட வேண்டுமென்ற பரந்த நோக்கத்தோடு, கேரள எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்காக விடுமுறை அளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கடந்த திராவிட மாடல் அரசிலும் இருமாநில உறவை வலுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை நானும் மேற்கொண்டேன். தோள்சீலைப் போராட்ட வெற்றியின் 200-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தோழர் பினராயி விஜயன் தமிழ்நாடு வந்தார். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவுக்காக நான் கேரளம் சென்றேன்,


Dinamani 20 minutes ago
Home Flash News