விபத்துக் காயங்களுக்கு சிறப்பான சிகிச்சை!
செயற்கை நுண்ணறிவு Ai நிகழ்த்தும் மாயம்!
நவீன விஞ்ஞானம் மானுட குலத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடை செயற்கை நுண்ணறிவு. இன்று நவீன மனிதன் விவசாயம் முதல் மருத்துவம் வரை சகலவற்றிலும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தரமான வாழ்வை வாழ்ந்துவருகிறான். மருத்துவம் போன்ற நுட்பமும் சிக்கலுமான துறைகளில் மனிதன் வேலை செய்கிற போது நிகழும் துல்லியமான விளைவுகளைவிட துல்லியமானதாகவும் குறைந்தபட்ச சேதாரங்களைவிட குறைவானதாகவும் விளைவுகளை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியப் பங்குவகிக்கிறது.
இன்று நவீன மருத்துவம் நோயறிதல் எனப்படும் Diagnosis முதல் அறுவைசிகிச்சை வரை பல முக்கியமான மருத்துவ சேவைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அற்புதமான விளைவுகளை உருவாக்கி வருகிறது. அதில் ஒன்றுதான் விபத்துக் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் செயற்கை நுண்ணறிவு. இது விபத்தில் உருவாகும் காயங்களுக்கு மிகச் சிறப்பான மருத்துவத்தைத் தருகிறது.