ஸ்டாலினோடு கை கோர்த்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 2017ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்தது. இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மோதல்கள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ். இதனையடுத்து பல சட்ட போராட்டங்கள் நடத்தினாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து எந்த வித நிபந்தனையும் முறை அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி செய்தார்.
ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர் செல்வம் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது உசிலம்ப்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.