நுங்கம்பாக்கம் இல்லத்தில் பாக்யராஜ் உடல்! அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!
மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல், மருத்துவமனையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் இன்று(ஜூன் 27) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
சென்னையில் அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மரணமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்து தமிழ்த் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திரையுலகினர் அனைவரும் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உறவினர்கள், திரையுலகினர், மக்கள் அஞ்சலி செலுத்த உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.