ஆவின் நெய் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு வாபஸ்
சென்னை: மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவின் நெய்க்கான விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற்றது. மொத்த விற்பனையாளர்களுக்கு ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.37 உயர்த்தியிருந்ததை ஆவின் நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.Urban Transit
ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.37 உயாத்தியதற்கு பல்வேறு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆவின் நெய் விலையை உயர்த்தவில்லையென ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மொத்த விற்பனையாளர் லாப வரம்பில் செய்யப்பட்ட திருத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆவின் நிறுவனம், அனைத்து வகையான நெய்களையும் தற்போதைய சில்லறை விலையிலேயே நுகர்வோருக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறது. எந்தவொரு நெய் வகையின் விலையிலும் எந்த உயர்வும் செய்யப்படவில்லை.
மேலும், மொத்த விற்பனையாளர்களுக்கான கமிஷனில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளது. எனவே, முன்பு நடைமுறையில் இருந்த கமிஷன் அமைப்பே தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.