தொழில்துறையைச் சீரழித்த பெருமை தவெக அரசையே சாரும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
சென்னை: வெற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.History இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால் மக்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதாக ஊடகங்களில் வரும் செய்தி கவலையளிக்கிறது. வெயில் காலம் முடிந்தும் மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது. இந்த நிர்வாகத் தோல்வியும் அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.