Select Location
All Locations
State
Region
City / District
ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு: திமுக

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு: திமுக

சென்னை: பாஜக அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக திமுக குற்றசாட்டியுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.இந்திய செய்தி இன்றைய தினம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.


Dinakaran 1 hour ago
Home Flash News