முதல் நாளிலேயே களமிறங்கிய திமுக : இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் யார்?
இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல் 10 வரை) விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தற்போது அறிவித்திருக்கிறது. அதன்படி மதுராந்தகத்தில் திமுக சட்டத்துறை செயலர் பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா ஆகியோரும் போட்டியிடுவதாக திமுக அறிவித்திருக்கிறது.
வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக.!