விநாயகர் சதுர்த்தி 2026 | ஒரு கைபிடி மாவு போதும்.. வீட்டிலேயே ஈஸியாக பிள்ளையார் சிலை செய்வது எப்படினு தெரிஞ்சுக்கோங்க..!
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. இந்த நாளில் அனைவரும் விநாயகரை வீட்டில் அழைத்து படையல் போட்டு வழிபட்டு அவரை ஆற்றில் கரைத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பது வழக்கம்.
வைத்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. வட இந்தியா, தென் இந்தியா என அனைத்து இடங்களிலுமே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்காக கடைகளிலேயே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். கடலிலும், ஆற்றிலும் கரைக்கப்படுவதால் இயற்கைக்கு ஏற்ற வகையில் சிலைகளை தயாரிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்து வருகிறது. வண்ண நிறமிகளும் பாதிக்காதவாறு இருந்தால் தான் கடலில் உள்ள மீன்கள், தாவரங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது
முந்தைய காலங்களில் மண் அதிகமாக வீடுகளுக்கு அருகேயே கிடைத்ததால் அனைவரும் வீட்டிலேயே களி மண்ணால் விநாயகர் சிலைகளை செய்து வழிபட்டார்கள். தற்போது சமூகத்தில் வீடுகள் அதிகரித்து வருவதால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எப்படி விநாயகர் சிலை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.