‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக U/A சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்யவதாக தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று (ஜனவரி 9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதித்ததால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.