தமிழ்நாட்டில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம்.
தமிழ்நாட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையராக இருந்த இன்னசன்ட் திவ்யா, சுற்றுலா மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், சுற்றுலா மேலாண்மை இயக்குநராக இருந்த கிறிஸ்துராஜ், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த விசாகன், தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்த உமா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்த ரத்னா, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.