955 ஹெக்டேர் சதுப்பு நில காடுகள் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பு
மும்பை: மாநிலத்தில் உள்ள அனைத்து சதுப்பு நில பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு சுமார் 10 ஆண்டுகள் கழித்து, 955 ஹெக்டேர் சதுப்பு நில காடுகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான சதுப்பு நிலங்கள் உள்ளன.
இவற்றுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று 10 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால், வனசக்தி எனும் சுற்றுச்சூழல் அமைப்பு கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 7 கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களும் தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சதுப்பு நிலத்தை மாநில சதுப்பு நிலப் பிரிவிடம் ஒப்படைக்க வேண்டுமென என உத்தரவிட்டது.