Select Location
All Locations
State
Region
City / District
குருகிராம் மருத்துவரிடம் இருந்து நீட் வினாத்தாளை ரூ.30 லட்சத்துக்கு வாங்கிய ராஜஸ்தான் சகோதரர்கள் கைது

குருகிராம் மருத்துவரிடம் இருந்து நீட் வினாத்தாளை ரூ.30 லட்சத்துக்கு வாங்கிய ராஜஸ்தான் சகோதரர்கள் கைது

ஜெய்ப்பூர்: குரு​கி​ராம் மருத்​து​வரிட​மிருந்து ரூ.30 லட்​சத்​துக்கு நீட் வினாத்​தாளை வாங்​கிய​தாக ராஜஸ்​தானைச் சேர்ந்த சகோதரர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதில் ஒருவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழு​வதும் மே 3ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (யுஜி) 2026 தேர்வு நடை​பெற்​றது.

இந்தத் தேர்வுக்கு முன்​கூட்​டியே வினாத்​தாள் கசிந்​த​தாக புகார் எழுந்​த​தால் நீட் தேர்வு நேற்று முன்​தினம் ரத்து செய்​யப்​பட்​டது. இதுகுறித்து விரி​வான விசா​ரணை நடத்த அரசு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சிபிஐ முதல் தகவல் அறிக்​கையை பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது. இதில் கேரளா, மகாராஷ்டிர மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்காகச் சிறப்​புப் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதனிடையே, புதிய தேர்வு நடை​பெறும் தேதி அடுத்த 7 முதல் 10 நாட்​களுக்​குள் அறிவிக்​கப்​படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரி​வித்​துள்​ளது. 

இதனிடையே நீட் தேர்​வின் நம்​பகத்​தன்மை குறித்து மாணவர்​கள் கேள்வி எழுப்​பி​யுள்​ளதோடு, எய்ம்ஸ்​- டெல்லி மூலம் தேர்வை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். இந்​நிலை​யில், நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கின் பின்​னணி ஒவ்வொன்​றாக வெளிச்​சத்​துக்கு வந்து கொண்​டிருக்​கிறது. ராஜஸ்தானின் ஜம்வா ராம்​கரைச் சேர்ந்த சகோ​தரர்​களான மங்கிலால் மற்​றும் தினேஷ் பிவால் ஆகியோர், இந்த ஆண்டுக்கான நீட்​-​யுஜி வினாத் ​தாளை குரு​கி​ராம் மருத்​து​வர் ஒருவரிட​மிருந்து ஏப்​ரல் 26ம் தேதி ரூ.30 லட்​சத்​துக்கு வாங்​கியது தெரிய​வந்​துள்​ளது. இவர்​களில் ஒரு​வர், சிகார் பகு​தி​யில் நீட் தேர்​வுக்​குத் தயா​ராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்​தாளைக் கொடுத்​துள்​ளார். பின்​னர் ஏப்​ரல் 29-ம் தேதி அவர்​கள் அந்​தத் தாளை பலருக்கு விற்றுள்​ளனர். ஜெய்ப்​பூர் அருகே உள்ள ‘சி​கார்' பகு​தி, இந்த வினாத்​தாள் கசிவு மோசடி​யின் மையப்​புள்​ளி​யாக மாறி​யுள்​ளது. சிகாரில் உள்ள எம்​பிபிஎஸ் ஆலோ​சனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்​ட​வாரியா என்​பவர் அந்​தத் தாளை வாங்​கி, கேரளாவில் எம்​பிபிஎஸ் பயிலும் சிகார் மாணவர் ஒரு​வருக்கு ரூ.30,000-க்கு விற்​றுள்​ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News